Published : 05 Jun 2022 04:30 AM
Last Updated : 05 Jun 2022 04:30 AM

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு:

மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்கிஸ் ஆகியோர் 19.6.2020-ல் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என மொத்தம் 9 பேரை சிபிஐ போலீ ஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின்னர் சாத்தான்குளம் வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி நாகலெட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x