Published : 13 Jun 2014 10:06 AM
Last Updated : 13 Jun 2014 10:06 AM

அம்மா உணவகத்தை பார்வையிட வரும் குஜராத் அதிகாரிகள்

சென்னையில் அம்மா உணவகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த உணவகங்களை பார்த்து, தங்கள் மாநிலங்களில் அமைப்பதற்காக பல்வேறு மாநில அதிகாரிகளும் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் வந்தனர். அதே போன்று கடந்த மே மாதம், எகிப்து நாட்டு அதிகாரிகள் வந்தனர்.

தற்போது குஜராத் மாநிலத்திலிருந்தும் அதிகாரிகள் வந்து பார்வையிட உள்ளனர். முன்னதாக குஜராத் வேலைவாய்ப்பு துறையின் ஆலோசகர் பாண்டவ், வியாழக்கிழமை சென்னைக்கு வந்திருந்தார். இதேபோல் குஜராத்தில் தொடங்குவது பற்றி கருத்து தெரிவிப்பார்கள் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x