Published : 26 Apr 2022 02:34 PM
Last Updated : 26 Apr 2022 02:34 PM

2020 - 21 ஆம் ஆண்டில் டாஸ்மாக் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய்  

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றம் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மனு விற்பனையாது தமிழ்நாடு மாநில வாணிப கழகம் என்று அழைக்கப்படும் என்று டாஸ்மாக் மூலம் செய்யப்பட்டுவருகிறது. தமிழகம் முழுவதும் 5380 சில்லறை விற்பனை கடைகளும், இதனுடம் இணைந்த 3240 மது கூடங்களும் உள்ளது. இந்த மது கூடங்களில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து தயாரிக்கப்ட்ட மனுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் 2020 - 2021 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிபேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவைகள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது. 2003-04 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் 3639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில் 19 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.36 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2200 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. 2020-21ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.33,811.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x