Published : 15 Apr 2022 06:23 AM
Last Updated : 15 Apr 2022 06:23 AM

அரசியல் காரணத்துக்காகவே தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

அரசியல் காரணத்துக்காக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது மரபு. முதல்வர் என்ற அடிப்படையில்தான் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். ஸ்டாலின் தமிழக மக்களுக்கான முதல்வர்தானே தவிர, திமுக உறுப்பினர்களுக்கான முதல்வர் அல்ல. அப்படியிருக்க, அந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். அனைத்தையும் அரசியலாக்க வேண்டும் என்று திமுக கிளம்பியுள்ளது

11 மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை ஆளுநர் கூறியுள்ளார். அரசு அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதை ஏன் வெளியிட மறுக்கின்றனர்?

அரசியல் காரணத்துக்காக தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x