Published : 03 Apr 2022 04:00 AM
Last Updated : 03 Apr 2022 04:00 AM
அதிமுக கொறடாவும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கவுன்சிலர், தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவினர் வென்றதை திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
காவல்துறையை பயன்படுத்தி, அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து, துன்புறுத்தும் நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இச்சம்பவத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையினர் மீதும் தனிப்பட்ட முறையில் நீதி கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment