Published : 12 Mar 2022 07:54 AM
Last Updated : 12 Mar 2022 07:54 AM

சிபிஎஸ்இ 10, 12-க்கு ஏப்.26 முதல் 2-வது பருவ பொதுத் தேர்வு

சென்னை: கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10, 12-ம் வகுப்புபொதுத் தேர்வுகளை 2 பருவங்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டது. அதன்படி, முதல் பருவத்தேர்வு நவம்பர் - டிசம்பரில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 2-வது பருவ பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 12-ம் வகுப்புக்கான 2-வது பருவ பொதுத் தேர்வு ஏப்.26-ம் தேதி தொடங்கி மே 19-ம்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் தினமும் காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

10-ம் வகுப்புக்கான 2-வது பருவ பொதுத் தேர்வு ஏப்.26-ம்தேதி தொடங்கி மே 24-ம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10.30 முதல் 12.30 மணிவரை நடைபெறும். ஒருசில தேர்வுகள் மட்டும் காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x