Published : 16 Feb 2022 06:07 AM
Last Updated : 16 Feb 2022 06:07 AM

நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:

காற்றின் வேக மாறுபாடு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பிப்.16-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பிப்.17 முதல் 19-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். வெப்பநிலை 22 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x