Published : 14 Feb 2022 07:50 AM
Last Updated : 14 Feb 2022 07:50 AM

தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

சென்னை: தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாலத்தீவில் இருந்து வட கடலோர கர்நாடகா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 15, 16, 17-ம் தேதிகளில்தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 23 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

13-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 8 செ.மீ., திருக்குவளை, கோடியக்கரையில் 6 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x