Published : 13 Feb 2022 12:04 PM
Last Updated : 13 Feb 2022 12:04 PM

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பை நாசமாக்கும் அமெரிக்கன் படைப்புழுக்கள்: கலக்கத்தில் விவசாயிகள்

கரும்பு தோகையில் உள்ள அமெரிக்கன் படைப்புழு.

விழுப்புரம்

தமிழ்நாட்டின் சர்க்கரை உற்பத்தி யில் பெரும் பங்களிப்பை விழுப் புரம் மாவட்டம் வழங்குகிறது. இம்மாவட்டத்தில் உணவு பயிர் களை தாக்கி மிகப் பெரிய சேதத்தை விளைவிக்க கூடிய அமெரிக்கன் படைப் புழுக்கள் கரும்பு பயிர்களை முதன் முறை யாக தாக்கியுள்ளது.

வட அமெரிக்காவை பூர்விக மாகக் கொண்ட இந்தப் புழுக் கள் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய அளவில் காணப் படுகின்றன. தமிழகத்தில் தானிய வகைகளான சோளம், உளுந்து, பாசிப்பயிறு, அவரை உள்ளிட்ட பயிர்களை மட்டுமே இதுவரை தாக்கி வந்த இந்த அமெரிக்கன் படைப்புழுக்கள், தற்போது கரும்பு பயிர்களை தாக்கியுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் கடும் அதிர்ச் சியடைந்துள்ளனர்.

காணை, காணைக்குப்பம், ஆயந்தூர், ஆற்காடு, பெரும்பாக் கம், கஞ்சனூர், முண்டியம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்களின் பாதிப்பை காண முடிகிறது. பயிரிடப்பட்ட 30 முதல் 40 நாட்களிலேயே கரும்பு பயிர்களை தாக்கும் இப்புழுக்கள் கரும்பு சோகையை அரித்து, நாசம் செய்து விடுகிறது. இதனால் கரும்பு பயிர்கள் வளர்ச்சி அடையாமல் நாசமாகி விடுகிறது. ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக கரும்பு பயிரிட்டு வரும் விவசாயிகளே இதுவரை இந்த படைப்புழுக்களின் தாக்குதலை கண்டதில்லை என்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் விலை மிக அதிகம் என்பதால் சாதாரண ஏழை விவசாயிகளால் அதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, தமிழக அரசே மானிய விலையில் புச்சிக்கொல்லி மருந்தினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மேலும் இந்த வகையான அமெரிக்கன் படைப்புழுக்கள் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர்களை தாக்கி பெரும் சேதத்தை விளைவிப்பதற்கு முன்பாக இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து காணை ஊராட்சி ஒன்றிய வேளாண் அலுவலர் வரதராஜனிடம் கேட்ட போது, “இப்போதுதான் இந்த வகை புழுக்களின் தாக்கம் தொடங்கியுள்ளது. திண்டிவனம் வேளாண்அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தைதொடர்பு கொண்டு விவரம் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் திங்கட்கிழமை (நாளை) ஆய்வுக்கு வருவ தாக கூறியுள்ளனர். இப்புழுக்களை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் இருப்பு உள்ளது. விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டையுடன் வந்து மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x