Published : 09 Feb 2022 08:58 AM
Last Updated : 09 Feb 2022 08:58 AM

மானாமதுரையில் சுமை தூக்கும் பணியோடு தனி ஆளாக அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தனி ஆளாக பிரச்சாரப் பணியிலும், சுமை தூக்கும் பணியிலும் அதிமுக வேட்பாளர் ஈடுபட்டு வருகிறார்.

மானாமதுரை நகராட்சி 14வது வார்டில் அதிமுக வேட்பாளராக பழனி (56) போட்டி யிடுகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமை தொழிலாளியாக உள்ளார். வேலையை விட மனமில்லாத அவர், காலை, மாலையில் தனி ஆளாக சென்று பிரச்சாரம் செய்கிறார். மற்ற நேரங்களில் சுமைத்தூக்கும் பணியைச் செய்கிறார்.

இதுகுறித்து பழனி கூறியதாவது: அதிமுக நிர்வாகிகள் தனியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நான் தனி ஆளாக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறேன். மக்கள் காலை, மாலையில் மட்டும்தான் வீட்டில் இருப்பர். இதனால், அந்த சமயங்களில் வாக்குச் சேகரிப்பேன். மற்ற நேரங்களில் வேலைக்கு சென்று விடுவேன்.

ஏற்கெனவே 2 முறை அதிமுகவில் நின்றேன். ஒருமுறை மக்கள் வேண்டுகோளை ஏற்று வாபஸ் பெற்றேன். மற்றொரு முறை 18 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை வெற்றிபெறுவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x