Published : 28 Dec 2021 07:08 AM
Last Updated : 28 Dec 2021 07:08 AM

கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானஅல்லது மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

சென்னையில் வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் நிலவும்.

27-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மலைப் பகுதிகளான உதகமண்டலத்தில் 5.3 டிகிரி,வால்பாறையில் 7.5 டிகிரி, கொடைக்கானலில் 8.1 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x