Published : 26 Dec 2021 09:24 PM
Last Updated : 26 Dec 2021 09:24 PM

கரோனாவில் இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை தொகை: விவரங்களை வெளியிட்டார் மா.சுப்பிரமணியன்

சென்னை: கரோனாவினால் இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை தொகைப் பற்றிய விவரத்தினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப் படி கரோனா நோய்த் தொற்றால் இறந்த 375 முன்களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.25 இலட்சம் வீதம் மொத்தமாக ரூ.93.15 கோடி கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்கள் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 6483 குழந்தைகளுக்கு (இரண்டு பெற்றோர்கள் (அ) ஒரு பெற்றோர் இழந்தவர்கள்) ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ரூ.50,000 கருணை தொகை வழங்கும் திட்டத்தினை சென்னையில் 10 நபர்களுக்கு டிசம்பர் 8-ம் தேதி அன்று தொடங்கியதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் மேற்கூறிய தொகையை வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x