Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

தண்டவாள பராமரிப்பு பணியால் தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தாம்பரம் தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை கருத்தில்கொண்டு, தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே இன்றும் (செப். 5), வரும் 12, 19-ம் தேதிகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.45 மணி ரயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 10.50 மணி ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12, 1.20, 2, தாம்பரத்துக்கு காலை 11.30, மதியம் 12.20, 12.40, 1, 1.40, 2.30 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.20,11.30 மதியம் 12.10, 12.30, 1 மணி, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 8.45, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25, திருமால்பூர்-சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x