Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

ஆக.23 முதல் 27-ம் தேதிவரை -எம்எல்ஏக்களுக்கு புத்தாக்கம், கணினிவழிப் பயிற்சி: சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு

எம்எல்ஏக்களுக்கு ஆக.23, 24-ம் தேதிகளில் புத்தாக்கப் பயிற்சியும், 25-ம் தேதி முதல் 27 வரை கணினி வழிப்பயிற்சியும் அளிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வரும் 23, 24-ம் தேதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் எம்எல்ஏ விடுதியில் 10-வது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். மேலும், அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினி வழிப்பயிற்சி வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை தற்போது பேரவைக் கூட்டம் நடைபெறும் இந்தக் கூட்டரங்கில் அளிக்கப்படும். இப்பயிற்சியில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். பேரவை மீண்டும் வரும் 23-ம் தேதி கூடும்.

இவ்வாறு பேரவைத் தலைவர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x