Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை

தமிழகத்தில் வெப்பச் சலனம், காற்றின் திசை வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக இன்றுசென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானமழை பெய்யக்கூடும்.

29, 30-ம் தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 1-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தென்காசி மாவட்டங்கள், அதை ஒட்டியஉள் மாவட்டங்களில் மிதமானமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன்காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x