

சிதம்பரம் தொகுதியை திமுக முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதால், அங்கே மீண்டும் வெற்றிவாகை சூடியிருக்கிறார் அதிமுக எம்எல்ஏ-வான பாண்டியன். வெற்றிச் சான்றிதழுடன் எடப்பாடியாரைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போயிருந்தாராம் பாண்டியன். அவரை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று கையைப் பிடித்துக் கொண்ட எடப்பாடியார், “என்ன செய்ய பாண்டியன்... களம் நமக்கு சாதகமா இருந்துச்சு. கட்சிக்காரங்கள நம்பினோம். ஆனா, குடுத்த காசை செலவழிக்காம விட்டு பலபேரு நம்மள ஏமாத்தீட்டாங்க” என்று சொல்லி வேதனைப்பட்டாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்