Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வீடு புகுந்து உணவு பொருட்களை சூறையாடும் குரங்குகள்: வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் நிற்கும் குரங்குகள்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வீட்டுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை குரங்குகள் சூறையாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள் ளனர்.

காரைக்குடி அருகே பள்ளத் தூர் பேரூராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரி கின்றன. இவை கூட்டம், கூட்டமாக பூட்டியிருக்கும் வீடுகளில் ஓட்டை பிரித்தும், ஜன்னல்கள் வழியாகவும் உள்ளே நுழைகின்றன. பிறகு சமையலறையில் இருக்கும் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்வதும், அவற்றை சிதறிவிட்டும் செல்கின்றன.

மேலும் வீடுகளில் ஆட்கள் இருந்தாலும் பயமின்றி உள்ளே நுழைகின்றன. கூட்டமாக வரு வதால் அவற்றைத் தடுக்க முடிய வில்லை. மேலும் விரட்டினால் அவர்களை கடிக்கின்றன. சில சமயங்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகள், சிறுவர்களை கடித்துவிட்டு செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறுகையில்,‘‘ பள்ளத்தூர் மட்டு மின்றி அதனைச் சுற்றியுள்ள கானாடுகாத்தான், கண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவான குரங்குகளே வந்தன. தற்போது அவை பல்கி பெருகிவிட்டன. வீட்டில் ஆட்கள் இருந்தாலும் துணிந்து வீட்டுக்குள் சென்று உணவுப் பொருட்களை எடுத்துச் செல்கின்றன.

குரங்குகளை பிடிக்க வனத் துறையினரிடம் புகார் கொடுத் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளையும், உணவுப் பொருட்களையும் குரங்குகளிடம் இருந்து காப்பதே பெரும் வேலையாக உள்ளது என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x