Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

சென்னை- விசாகப்பட்டினம், லக்னோவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினம், லக்னோவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.02007/08) இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் முதல் சேவை வரும் 15-ம் தேதி தொடங்கி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் விசாகப்பட்டினத்தில் இருந்து இரவு 7.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 7.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் வரும் 16-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 10.30 மணிக்கு விசாகப்பட்டினம் சென்று அடையும். மறு அறிவிப்பு வரும் வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து லக்னோவுக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, சென்னை சென்ட்ரலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8.20 மணிக்கு லக்னோ சென்றடையும். இந்த ரயில் சேவை வரும் 12, 16, 19, 23, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் வாரந்தோறும் வியாழன் மற்றும் திங்கள்கிழமைகளில் லக்னோவில் இருந்து மாலை 4.20 மணிக்குப் புறப்பட்டு 3-வது நாள் காலை 6.50 மணிக்கு சென்னையை வந்து அடையும். இந்த ரயில் சேவை வரும் 14, 18, 21, 25, 28 மற்றும் பிப்.1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (டிச. 6) காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x