Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

நாகை உள்ளிட்ட 5 கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி வளிமண்டல சுழற்சிநிலவி வருகிறது. அதன் காரணமாகஅடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். இதர கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில்வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். புதன் காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில்ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்சமாக 10 செமீ மழைபதிவாகியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x