Last Updated : 08 Dec, 2020 04:51 PM

 

Published : 08 Dec 2020 04:51 PM
Last Updated : 08 Dec 2020 04:51 PM

புதுச்சேரியில் புதிதாக 42 பேருக்குக் கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 42 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 8) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,883 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 11 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், ஏனாமில் 3 பேருக்கும், மாஹேவில் 26 பேருக்கும் என மொத்தம் 42 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 615 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 311 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 209 பேரும், வீட்டுத் தனிமையில் 179 பேரும் என மொத்தம் 388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 45 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 308 (97.31 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 816 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 224 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x