Published : 24 Oct 2020 06:58 AM
Last Updated : 24 Oct 2020 06:58 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்.30-ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம், செங்கை மாவட்டங்களில் மிலாது நபி வரும் அக். 30-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி அன்றைய தினத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூட வேண்டும் என அந்த அறிக்கையில் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment