Published : 06 May 2014 10:41 AM
Last Updated : 06 May 2014 10:41 AM

வேலூர் பெல் நிறுவனம் அருகே மர்ம பெட்டியால் பரபரப்பு

வேலூர் பெல் நிறுவனம் அருகே கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் ராணிப்பேட்டை குடியிருப்புப் பகுதியில் மர்ம பெட்டி ஒன்று கிடந்தது. செல்போனும் சில ஒயர்களும் அந்த பெட்டியில் இருந்தன. இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கடந்த 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த குவாஹட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரட்டை குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார், 14 பேர் காயமடைந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெல் நிறுவனம் அருகே கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x