சென்னை மாநகராட்சியில் கரோனா உயிரிழப்பு 3 ஆயிரத்தை கடந்தது: தேசிய, மாநில சராசரியைவிட அதிகம்

சென்னை மாநகராட்சியில் கரோனா உயிரிழப்பு 3 ஆயிரத்தை கடந்தது: தேசிய, மாநில சராசரியைவிட அதிகம்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை தேசிய, மாநில சராசரியைவிட சென்னையில் அதிகமாக உள்ளது.

சென்னையில் கடந்த 15-ம் தேதிநிலவரப்படி, இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது. 1 லட்சத்து37 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,883 ஆக குறைந்துள்ளது. இதுவரை 11 லட்சம் பேருக்கு மேல் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 12 ஆயிரம்பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதேநேரம், சிகிச்சை பலனின்றிஇதுவரை 3,004 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 337, கோடம்பாக்கத்தில் 319, திருவிக நகரில் 307, ராயபுரத்தில் 305 பேர் உயிரிழந்துள்ளனர்.

சராசரியாக, சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இது தேசிய அளவில் 1.64 சதவீதமாகவும், தமிழக அளவில் 1.65 சதவீதமாகவும் உள்ளது.

தேசிய, மாநில சராசரியைவிட சென்னையில் கரோனா இறப்பு விகிதம் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in