Published : 12 Sep 2020 05:35 PM
Last Updated : 12 Sep 2020 05:35 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு:

“தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 (13.09.2020) மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

தேவலா (நீலகிரி) 6 செ.மீ, அவலாஞ்சி (நீலகிரி) 5 செ.மீ, வால்பாறை PTO (கோவை) 4 செ.மீ, மேல் பவானி (நீலகிரி), சோலையார் (கோவை), சின்னக்கல்லார் (கோவை), க்ளென் மோர்கண் (நீலகிரி) தலா 3 செ.மீ, பந்தலூர் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), வெண்ட் ஒர்த் எஸ்டேட் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), சின்கோனா (கோவை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 2 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 16 வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 வரை மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை மத்தியமேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப்.13 இரவு 11.30 மணி வரை கடல் உயர்அலை 3.0 முதல் 3.5 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x