Published : 04 Aug 2020 07:15 AM
Last Updated : 04 Aug 2020 07:15 AM
நடப்பு ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாதஅளவு 3 லட்சத்து 87 ஆயிரம்ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றுவேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளபாசன வயல்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவும், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு 25 தினங்களுக்கு முன்பாகவும் பாசன நீர்சென்றடைந்தது. இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட்3-ம் தேதி நிலவரப்படி 3 லட்சத்து87 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகடந்த ஆண்டைவிட 1.067 லட்சம்ஏக்கர் அதிகமாகும். மேலும், கடந்த30 ஆண்டு வரலாற்றில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பு இதுவே ஆகும்.
அதுபோல பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கரில்பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டதைவிட, 1.03 லட்சம் ஏக்கர் அதிகமாகும்.
அரசு நடவடிக்கைகள் கார ணமாக குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கரில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment