Published : 31 Jul 2020 05:34 PM
Last Updated : 31 Jul 2020 05:34 PM
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களில் விவரம்:
காவேரிப்பாக்கம், வேலூர், ஏற்காடு, சேலம் பகுதிகளில் தலா 7 செ.மீ., விழுப்புரத்தில் 6 செ.மீ., ஆலங்காயம் (வேலூர்), தாமரைபாக்கம் (திருவள்ளூர்), திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ., மீமாத்தூர் (கடலூர்), டி.எஸ்.சி.எல் கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) பகுதிகளில் தலா 4 செ.மீ, வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), போளூர் (திருவண்ணாமலை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) ஆனந்தபுரம் (விழுப்புரம்) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் அதில் வீசக்கூடும்.
ஜூலை 31-ம் தேதி (இன்று) தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடலோர கர்நாடகா, லட்சத்தீவு சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்டு 1-ம் தேதி
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடலோர மகாராஷ்டிரா பகுதியில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்டு 2-ம் தேதி
தென் மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கச்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலோர மகாராஷ்டிரா பகுதியில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3-ம் தேதி
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கடலோரம் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலோர மகாராஷ்டிரா பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 4-ம் தேதி
தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடலோர கேரளா, கடலோர கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலோரப் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் அலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஜூலை 31-ம் தேதி இரவு 11 மணி வரை கடல் அலை 2.8 முதல் 4 மீட்டர் வரை எழும்பக்கூடும்''.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment