Published : 09 Jun 2020 09:48 PM
Last Updated : 09 Jun 2020 09:48 PM
குமரி, கேரள எல்லை கரோனா பரிசோதனை மையத்தில் பணியில் இருந்த சுகாதார பணியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை மையத்தில் பணியில் இருந்த சுகாதாரத்துறையின் லேப் டெக்னிசனுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்திற்கு தினமும் வெளியூர்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உள்ளூரில் வசிப்போருக்கு கரோனா தொற்று இல்லாத நிலையில் சென்னை, மும்பை உட்பட வெளியூர்களில் இருந்து வருவோருக்கு கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்றவர்களில் 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரம் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை குமரி மாவட்டத்தில் 105 பேராக அதிகரித்துள்ளது.
வெளியூர்களில் இருந்து வருவோரை சோதனை செய்வதற்காக தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை, மற்றும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் கரோனா பரிசோனை மையத்தில் பணியில் இருந்த கீழ்குளம் ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளரான லேப் டெக்னீசன் ஒருவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து லேப் டெக்னீசன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுகாதார பணியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து களியக்காவிளை கரோனா பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டு ஆய்வு செயழ்தார்.
லேப் டெக்னீசனின் ஊரான கருங்கல்லை அடுத்த கண்ணன்விளையை சற்றிய சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment