உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகச் சொல்லப்படுவது எல்லாம் தவறு. இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் வழக்கு - வழங்கப்படும் என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் மத்திய அரசு சார்பில் சொல்லப்பட வேண்டியது - ஏன் தயக்கம்? தயக்கம் சட்டத்தில் இல்லை - மத்திய அரசின் மனத்தில்தான்.
உயர் சாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில், எப்படி அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?
ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சதவிகிதத்தில் இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருப்பதால் சிக்கல் என்பது சரியான வாதமல்ல.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு - எல்லா மாநிலங்களிலும் ஒரே அளவில்தானே உள்ளது - எனவே இது தவறான வாதம்.
மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு எடுத்துச் செல்லப்படும் முதுநிலை மற்றும் இளநிலைக்கான (எம்பிபிஎஸ் இடங்கள் 15%, முதுநிலைப் பட்டத்துக்கான இடங்கள் 50%) இடங்களில் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அறவே இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை என்ற சமூக அநீதியை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறது.