

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விவசாயிகள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நெல் நடவு செய்தனர்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி வழங்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி பகுதியில் கண்மாய்களில் தண்ணீர் உள்ளது. இதை பயன்படுத்தி சிலர் கோடை விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் செந்தூர்குமரன் ஆலோசனைப்படி 110 நாட்கள் பாரம்பரிய நெல் வகையான கருங்குறுவையை சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர்.