Published : 04 Jan 2020 05:39 AM
Last Updated : 04 Jan 2020 05:39 AM

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

திருநெல்வேலி

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை, திருநெல்வேலி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கைது செய்யப்பட்டார். வரும் 13-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் மத்திய சிறையில் நெல்லை கண்ணன் அடைக்கப்பட்டார்.

அவருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, திருநெல்வேலி 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கடற்கரை செல்வம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x