Published : 28 Dec 2019 02:04 PM
Last Updated : 28 Dec 2019 02:04 PM
மக்களவையில் நடந்த விவாதங்களில் இணையாக அல்லாமல் தானாகவே கலந்து கொண்டவர்களின் பட்டியலில் தமிழகத்தை பொறுத்தவரையில் தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் கடந்த பத்து ஆண்டுகளாக, அகில இந்திய அளவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன், தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் எம்.பி.க்களின் பணி பற்றி ஆய்வு தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி 17-வது மக்களவையில் இதுவரை நடந்துள்ள 2 கூட்டத்தொடரிலும் சேர்த்து அதிகஅளவில் விவாதங்களில் பங்கேற்ற எம்.பி.க்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி மக்களவையில் நடந்த விவாதங்களில் இணையாக அல்லாமல் தானாகவே கலந்து கொண்டவர்களின் பட்டியலில் தமிழகத்தை பொறுத்தவரையில் தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழக எம்.பி.க்களில் அதிக விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் மொத்தம் 42 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ் மொத்தம் 29 விவாதங்களில் கலந்து கொண்டு பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
தமிழக எம்.பி.க்களில் மூன்றாவதாக அதிகமான விவாதங்களில் பங்கேற்றவராக கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உள்ளார். அவர் மொத்தம் 28 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...