Published : 19 Dec 2019 10:04 AM
Last Updated : 19 Dec 2019 10:04 AM

வேலூர் சத்துவாச்சாரி அருகே கல்குவாரியில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு: 2 இளைஞர்களிடம் காவல் துறையினர் விசாரணை

வேலூர் சத்துவாச்சாரி அருகே கல்குவாரியில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் உடலை காவல் துறையினர் மீட்டனர். இது தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூர் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி வழியாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஆடு மேய்ப்பதற்காக சென்றனர். அங்கு, துர்நாற்றம் வீசியது. உடனே, அருகே சென்று பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் இளம்பெண் ஒருவர் உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து வேலூர் சத்து வாச்சாரி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் அழகுராணி தலைமையிலான காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர், 17 வயதுள்ள இளம்பெண் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், வேலூர் அடுத்த அரியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த ஷூ தயாரிப்பாளர் சரவணன் (42) என்பவரின் மகள் நிவேதா (17) என்பது தெரியவந்தது. மேலும், நிவேதா வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கேன்டீனில் வேலை செய்து வந்துள்ளார்.

ஏற்கெனவே நிவேதா, கொண வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேன்டீனில் வேலை செய்த போது, அங்கு மற்றொரு இளைஞருடன் நிவேதா பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் அவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் அவர் கல்குவாரி அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் எண்களை வைத்து விசாரித்தபோது நிவேதா, 2 இளைஞர்களுடன் அடிக்கடி செல் போனில் பேசியுள்ளது தெரியவந்தது. இருவரிடமும் கடந்த 14-ம் தேதி நிவேதா பேசியுள்ளது தெரியவந்தது.

அதன் பிறகு தீர்த்தகிரி மலையடி வாரத்தில் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டதற்கான தடயம் சிக்கியுள்ளதால், மலைக்கு அழைத்துச்சென்றவர்கள் நிவேதாவை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என தெரி கிறது. அதன்பேரில், 2 இளைஞர்களை பிடித்து விசா ரணை நடத்தி வருவதாகவ காவல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x