Published : 25 Jul 2015 08:48 AM
Last Updated : 25 Jul 2015 08:48 AM

சரத்குமார் ஆதரவாளருக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடக நடிகர் சங்க நிர்வாகி போலீஸில் புகார் அளித்தார்.

திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருப்பவர் எம்.எஸ்.முகமது மஸ்தான். அண்மையில் சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்திருந்த இவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன் வந்த ஒரு கடிதத்தில், ‘திருச்சி நாடக நடிகர்கள் விஷால் அணிக்கு ஆதரவாக ஓட்டு கேட்காவிட்டால் உன்னையும், குடும்பத்தையும் குண்டு வைத்து கொலை செய்துவிடுவோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யுமாறு மாநகர காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூரிடம் நேற்று முகமது மஸ்தான் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை ஆணையர் அவரிடம் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x