Published : 09 Jul 2015 08:34 AM
Last Updated : 09 Jul 2015 08:34 AM
மத்திய, மாநில அரசுகளைக் கண் டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் இணைந்து போராட்டம் நடத் தப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள் ளார்.
மதிமுக உயர்நிலை குழுக் கூட் டம் அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக் குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
ஜூலை 4-ம் தேதி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனும், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும் என்னைச் சந்தித்தனர்.
மத்திய பாஜக அரசு இந்துத் துவ செயல் திட்டத்துடன், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாமல் கார்ப்பரேட் நிறுவனங் களின் முகவராக பிரதமர் செயல் பட்டு வருகிறார். அதுபோல, தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு ஊழல் நிறைந்த, மக்கள் நலனுக்கு எதிரான அரசாக உள்ளது.
திராவிட இயக்க நூற்றாண்டு, அண்ணா பிறந்த நாள் மாநாடு வரும் செப்டம்பர் 15-ம் தேதி திருப் பூரில் நடைபெறவுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் காட்சி நெஞ்சை பதறச் செய்கிறது. இதற்கு மதுவை விற்பனை செய்யும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக சார்பில் மதுரையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாணவர்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டி நடைபெறும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT