Published : 22 Jul 2015 07:56 AM
Last Updated : 22 Jul 2015 07:56 AM
அரசு மற்றும் தனியார் மருத் துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,062 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்பு வதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்குகிறது.
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வில் அரசு மருத்து வக் கல்லூரிகளில் காலியாக உள்ள 6 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் காலியாக உள்ள 109 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப் பட உள்ளன. இதேபோல் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 20 பிடிஎஸ் இடங்கள் மற்றும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலி யாக உள்ள 927 பிடிஎஸ் இடங்களை நிரப்ப திட்ட மிடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT