Published : 15 Jul 2015 07:47 AM
Last Updated : 15 Jul 2015 07:47 AM

நகராட்சி குப்பைக் கிடங்குகளில் கேமரா, தீயணைப்பு உபகரணங்கள் பொருத்த உத்தரவு

தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி குப்பைக் கிடங்குகளிலும் கண்காணி்ப்பு கேமராக்கள் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் பொருத்த நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட கன்னடப்பாளையத்தில் 4.55 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில் கடந்த 6-ம் தேதி இரவு தீப்பிடித்தது. 9-ம் தேதி மாலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இப்பகுதியை அமைச்சர்கள் பார்வையிட்டு தீத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

எதிர்காலத்தில் தீப்பிடிக்காமல் தடுக்கவும், கண்காணிக்கவும் குப்பைக் கிடங்கை சுற்றி தெருவிளக்குகள், சாலை வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x