Published : 04 Jul 2015 08:49 AM
Last Updated : 04 Jul 2015 08:49 AM

பொறியியல் பட்டதாரி கொலை வழக்கு: திருவைகுண்டத்தில் ஒருவர் சரண்

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு அருகே பொறியியல் பட்ட தாரி கோகுல்ராஜ் கொலை செய் யப்பட்ட வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் நீதிமன்றத்தில் நேற்று ஒருவர் சரண் அடைந்தார்.

கோகுல்ராஜ்(23) காதல் பிரச்சினை தொடர்பாக கடந்த 23-ம் தேதி ஈரோடு அருகே பள்ளிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த குமார்(37) என்பவர் திருவைகுண் டம் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.

சரணடைந்த குமார், தீரன் சின்னமலை பேரவையின் சேலம் மாநகரச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x