Published : 24 Sep 2019 08:35 AM
Last Updated : 24 Sep 2019 08:35 AM

கீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடங்க வாய்ப்பு

கீழடியில் 5-வது கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான குறியீடு உள்ள பானை ஓடு, இரும்புப் பொருட்கள், சுடுமண் பொம்மைகள், கருப்பு மண் பாத்திரம்.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடியில் நடை பெற்று வரும் 6-வது கட்ட அக ழாய்வு பணி செப். 30-ல் நிறை வடைகிறது. விரைவில் 6-வது கட்ட அகழாய்வு நடைபெற வாய்ப்புள்ள தாக தொல்லியல்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ல் அகழாய்வு மேற் கொண்டது. அதைத் தொடர்ந்து 2 மற்றும் 3-வது கட்ட அகழாய்வை நடத்தியது. இந்த மூன்று அகழாய்வு மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பிறகு, நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற் கொண்டதில் 5,820 தொல்பொருட் கள் கண்டெடுக்கப்பட்டன.

5-வது கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதியிலிருந்து நடை பெற்று வருகிறது. இப்பகுதி யைச் சேர்ந்த முருகேசன், கருப் பையா, மாரியம்மாள், போத குரு, நீதி ஆகியோரது நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில், இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறைகிணறுகள் கண்டறியப் பட்டன. மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங் கள், இரும்பு பொருட்கள், செப்பு, வெள்ளி காசுகள், தண்ணீர் குவளை, சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட் கள் கிடைத்துள்ளன. தற்போது தொல்பொருட்களை ஆவணப் படுத்தும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி செப்.30-ம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து 6-வது கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மண லூர் ஆகிய இடங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 4-வது கட்ட அக ழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தில், கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் பொது மக்கள், தொல்லியல் ஆர்வலர்களி டையே அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon