Published : 17 Jul 2015 09:17 PM
Last Updated : 17 Jul 2015 09:17 PM
திமுக எம்.பி. கனிமொழி, திடீர் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தைராய்டு பிரச்சினை என்பதால், அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழிக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கனிமொழியைப் பார்த்து நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ''கனிமொழியின் கழுத்தில் பிடரிக்குப் பக்கத்தில் தைராய்ட் கிளாண்ட்ஸ் ஒன்றை அகற்றுவதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, அந்தக் கட்டியை அகற்றிவிட்டனர். கனிமொழி உடல் நலம் பெற்று மருத்துவமனையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார்'' என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT