Published : 04 Jul 2015 02:51 PM
Last Updated : 04 Jul 2015 02:51 PM
பண்ருட்டி நகர திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் பச்சையப்பன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசும்போது:
தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியவேண்டும் என போலீஸார் பொதுமக்களுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். ஆனால் தரமான ஹெல்மெட்டுக்குத் தட்டுப் பாடு நிலவி வருகிறது. எனவே ஹெல்மெட் அணிய 6 மாத காலம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். பண்ருட்டி நகராட்சி செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியநிலையில் இருப்பதால், நகரின் அத்தியாவசியப்பணிகள் எதுவும் முறையாக நடைபெற வில்லை. அதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT