Published : 06 Jul 2015 08:41 AM
Last Updated : 06 Jul 2015 08:41 AM
சென்னை விமான நிலையத்தில் நேற்று கண்ணாடி உடைந்து விழுந்தது.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள், கிரானைட் கற்கள், மேற்கூரைகள் இடிந்து விழுவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள 2-வது நுழைவு வாயிலில் நேற்று மாலை மிகப்பெரிய கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து விழுந்தது.
அந்த இடத்தில் பயணிகள் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் உடைந்த கண்ணாடி துகள்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் நடக்கும் 43-வது விபத்தாகும் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT