Published : 15 Jul 2015 07:40 AM
Last Updated : 15 Jul 2015 07:40 AM
கடந்த சில நாட்களாக சென்னை யை சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயில், தற்போது சற்று தணிந்துள்ளது. வரும் நாட்களில் வெயில் மேலும் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஜூலை மாத தொடக்கத்திலிருந்தே வெயில் அதிகமாக காணப்பட்டது. முதல் வாரத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயில் இருந்தது. அதன் பிறகு கடந்த 5 நாட்களாக 39 டிகிரிக்கும் கீழே வெயில் குறையவில்லை.
ஆனால் நேற்று சென்னையில் 37.6 டிகிரி வெயில் மட்டுமே பதிவாகியிருந்தது. காலை முதல் வானம் சற்றே மேக மூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் சாலைகளில் செல்லும் போது உஷ்ணத்தை உணர முடிந்தது. மழை வருமோ என்று சென்னை வாசிகள் எதிர்பார்த் திருந்த நிலையில் மழை பெய்யாமல் ஏமாற்றியது.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 2 நாட்களில் வெயில் மேலும் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT