Published : 12 Jul 2015 11:12 AM
Last Updated : 12 Jul 2015 11:12 AM

பயணிகளுக்கு குறைந்த விலையில் குடிநீர் வழங்க 1200 ரயில் நிலையங்களில் 5 ஆயிரம் நவீன இயந்திரங்கள்: 14-ம் தேதி டெண்டர் திறப்பு

பயணிகளுக்கு குறைந்த விலை யில் குடிநீர் வழங்குவதற்காக முதல்கட்டமாக நாடு முழுவதும் 1,200 ரயில் நிலையங்களில் மொத்தம் 5 ஆயிரம் இயந்திரங் களை அமைக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.

பயணிகள் வசதிக்காக..

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏற்கெனவே குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நீர் ஆதாரங்கள் குறைவாக உள்ள ரயில் நிலையங் களில் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதனால், அதிக விலை கொடுத்து மக்கள் குடிநீர் வாங்கும் நிலை உள்ளது.

இதைத் தவிர்க்கவும் ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையிலும் குறைந்த விலையில் குடிநீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 வகையில் இந்த குடிநீரை வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் முதல்கட்டமாக 1,200 ரயில் நிலையங்களை தேர்வு செய்து, அங்கு குடிநீர் வழங்கும் 5 ஆயிரம் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த இயந்திரங்களில் 300 மில்லி, அரை லிட்டர், ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் அளவுகளில் குடிநீரைப் பெறலாம். பாட்டில் இல்லாமல் 300 மில்லி குடிநீர் ரூ.1-க்கும் பாட்டிலில் ரூ.2-க்கும் கிடைக்கும். அரை லிட்டர் பாட்டில் இல்லாமல் ரூ.3, பாட்டிலுடன் ரூ.5 எனவும், ஒரு லிட்டர் பாட்டில் இல்லாமல் ரூ.5, பாட்டிலுடன் ரூ.8, இரண்டு லிட்டர் பாட்டில் இல்லாமல் ரூ.8, பாட்டிலுடன் ரூ.12, ஐந்து லிட்டர் பாட்டில் இல்லாமல் ரூ.20, பாட்டிலுடன் ரூ.25 என்ற விலைகளில் விற்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நாடு முழுவதும் குறைந்த விலையில் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,200 ரயில் நிலையங்களில் 5 ஆயிரம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப் படும். தெற்கு ரயில்வேயில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இந்த குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு நடை மேடையிலும் முன்பகுதியில் ஒன்றும், பின்பகுதியில் ஒன்றுமாக இயந்திரம் அமைக்கப்படும்.

200-க்கும் மேற்பட்ட...

சென்னை சென்ட்ரல், கும்மிடிப் பூண்டி, காட்பாடி, ஆவடி, பெரம்பூர், திருவள்ளூர், வில்லி வாக்கம் உள்ளிட்ட பகுதியில் 62 இயந்திரங்களும், சென்னை எழும்பூர், மாம்பலம், அம்பத்தூர், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 52 இயந்திரங்களும் அமைக்கப்பட உள்ளன. இது தவிர கோவையில் 12, நெல்லையில் 10, ஈரோட்டில் 10, சேலத்தில் 8, திருப்பூரில் 4, மேட்டுப்பாளையத்தில் 3, கரூரில் 3 என 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் குடிநீர் இயந்திரங்கள் அமைக் கப்படுகிறது.

இதற்கான டெண்டர் வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர், அடுத்த சில மாதங் களில் குறைந்த விலையில் படிப்படியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x