Published : 13 Jul 2015 10:03 PM
Last Updated : 13 Jul 2015 10:03 PM
உண்மையான ஊழலற்ற காமராசர் ஆட்சியை பாமகவால் மட்டுமே கொடுக்க முடியும் என கோவையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
கோவையில் பாமகவின் கொங்கு மண்டல அரசியல் மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. அதில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
காமராசர் ஆட்சிக்குப் பிறகு 25 ஆண்டுகள் அதிமுகவும், 22 ஆண்டுகள் திமுகவும் மாறிமாறி ஆட்சி செய்தன. ஆனால் இந்த காலகட்டத்தில் மக்கள் முன்னேற்றம் அடைந்தார்களா? ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகத்தான் மாறி வருகின்றனர்.
திமுக, அதிமுகவை ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராசர் சொன்னார். இந்த இரண்டு மட்டைகளையும் அகற்றும் பொறுப்பை, காலம் எங்களுக்கு கொடுத்துள்ளது. சரியான நேரத்தில் அதை நாங்கள் செய்யாவிட்டால் தமிழகத்துக்கு விடிவுகாலமே இல்லை. தமிழகத்தில் யாரைக்கேட்டாலும் காமராசர் ஆட்சியைக் கொடுப்போம் என்கிறார்கள்.
ஆனால், உண்மையான ஊழலற்ற காமராசர் ஆட்சியை பாமகவால் மட்டுமே கொடுக்க முடியும். தமிழகத்தை முன்னேற்றும் நல்ல திட்டங்களோ, கொள்கைகளோ வேறு யாரிடமும் இல்லை.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT