Published : 12 Jul 2015 01:37 PM
Last Updated : 12 Jul 2015 01:37 PM
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தால்தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் இந்திரஜித் போஸ் கூறினார்.
இது தொடர்பாக நிருபர் களிடம் சென்னையில் அவர் கூறியதாவது:
இந்திய பொருளாதாரத்தின் நிலையை உணர்ந்து, நமது வாங்கு சக்தியை அறிந்துதான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியா வில் பெட்ரோல், டீசல் என்பது அத்தியாவசியமானதாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள் நாட்டு நீர்ப்போக்குவரத்து அதிகளவில் உள்ளது. சாலைப் போக்குவரத்தைவிட நீர்ப்போக்குவரத்துக்கு மிகக் குறைந்த அளவே எரிபொருள் தேவைப்படும். இதனால் அவர் களால் நிறைய சேமிக்க முடிகிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படியில்லை.
கச்சா எண்ணெய் விலை ஏறும்போது, பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படுவது உண்மை தான். ஏனென்றால் அப் போது மத்திய மாநில அரசுகள் வரிகளை அதிகப்படுத்து கின்றன. கச்சா எண்ணெய் விலை குறையும்போது, வரிகள் குறைக்கப்படுவதில்லை. அதனால்தான் பெட்ரோல், டீசல் விலை பைசா அளவிலேயே குறைக்கப்படுகிறது.
காஸ் வைத்திருப்பவர்களில் 89 சதவீதம் பேர் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைந் துள்ளனர். அந்த திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30-ம் தேதியாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகும் அத்திட்டத்தில் இணை யலாம். ஆனால், அவர்களுக்கு ஜனவரி மாதம்முதல் வாங்கிய சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்காது.
நாட்டில் இதுவரை 10 லட்சத்து 5 ஆயிரத்து 791 பேர் காஸ் மானியத்தை கைவிட்டுள்ளனர். தமிழகம், டெல்லி, உ.பி., மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்திட்டத்தை கைவிட்டுள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 ஆயி ரத்துக்கும் அதிகமான மையங் களின் காற்று மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி தொழில் நுட்பத்தை செயல்படுத்தி, எங்கள் பணிகளை மேற்கொள் கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT