Published : 25 Jul 2015 11:33 AM
Last Updated : 25 Jul 2015 11:33 AM

கூடலூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 3 ஆண்டு காலம் ஓரிடத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பதை, ஓராண்டாக மாற்ற வேண்டும்; கலந்தாய்வை நேர்மையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளரும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவருமான ஆனந்திகுமாரி தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி, அமைப்பின் மாவட்டச் செயலாளர் கே.அன்பழகன் பேசினார்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் கருணாநிதி, செயலாளர் சுனில்குமார், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சங்கர், தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட 189 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x