Published : 08 Jul 2015 07:42 AM
Last Updated : 08 Jul 2015 07:42 AM
சென்னை அண்ணாநகர், திருமங் கலத்தில் செயல்பட்டுவரும் ஃபோகஸ் அகாடமியில் குரூப்-2 நேர்முகத் தேர்வுக்கான இலவச பயிற்சி இன்றுமுதல் 7 நாட்களுக்கு நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 1,064 குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 15-ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு அரசு உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் நடப்பு நிகழ்வுகள், பட்டப்படிப்பு மற்றும் மாணவர்களின் சுய விவரங்கள் தொடர்பாகவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். மாதிரி நேர்காணலும் நடைபெறும்.
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தங்களின் சுய விவரங்களுடன் நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94427 22537 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT