Published : 18 Jul 2015 07:52 AM
Last Updated : 18 Jul 2015 07:52 AM

சென்னையில் திடீர் மழை

சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது.சென்னையில் நேற்று காலையில் வெயில் சற்று தணிந்தி ருந்தது. ஆனால் மதிய வேளையில் மீண்டும் வெயில் அதிகரித்தது. மாலை 4 மணியளவில் ராயப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் லேசாக மழை பெய்தது. அதன் பிறகு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. தாம்பரம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 39.6 டிகிரியும் மீனம்பாக்கத்தில் 39 டிகிரியும் வெயில் பதிவாகியது. அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x