Published : 17 Jul 2015 08:30 AM
Last Updated : 17 Jul 2015 08:30 AM
சுற்றுலாத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுற்றுலாத்துறை இந்த ஆண்டும் ஆடி மாத அம்மன் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா வில் தமிழகத்தில் உள்ள 108 அம்மன் கோயில்களை தரிசிக்கலாம். வாரம் தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை களில் சென்னையில் இருந்து புறப்பட்டு, 5-ம் நாள் இரவு சென்னை வந்தடையும் வகையில் சுற்றுலா அமையும்.
சென்னை, புதுச்சேரி, மதுரை, சிதம்பரம், சீர்காழி, மாயவரம், திருக்கடையூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 108 அம்மன் கோயில்கள் இந்த சுற்றுலாவில் அடங்கும். சுற்றுலாவில் பங்கேற்க ஒருவருக்கு ரூ.5,500 கட்டணம். 4 முதல் 10 வயதுள்ள சிறுவர்களுக்கு ரூ.4,900. மேலும் தனிநபருக்கு சொகுசு அறையில் தங்க ரூ.6,500 கட்டணம் வசூலிக் கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு 044-2533 3444,2533 3333, 2533 3857, 2533 3286 தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT