Published : 17 Jul 2015 08:50 AM
Last Updated : 17 Jul 2015 08:50 AM

தமிழகத்தில் நான்கு நகரங்களில் கடும் வெயில்

தமிழகத்தில் நேற்று சென்னை, கடலூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் 39 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது.

புதுச்சேரியில் 39.9 டிகிரி, கடலூரில் 39.6 டிகிரி, மதுரையில் 39.5 டிகிரி, திருச்சியில் 39.2 டிகிரி, சென்னையில் 39.1 டிகிரி வெயில் நேற்று பதிவாகியது. வேலூரில் 38 டிகிரி வெயில் பதிவாகியது.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் 3 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 2 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், நீலகிரி மாவட்டம் தேவலா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆகிய இடங்களில் ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x